நெட்டிஸன்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட பிரியங்கா, வைரலாகும் புகைப்படம்!

நெட்டிஸன்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட பிரியங்கா, வைரலாகும் புகைப்படம்!

நெட்டிஸன்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட பிரியங்கா, வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தீபாவளி பண்டிகையன்று பாட்டாசுகளை வெடிக்காமல் பண்டிகையை கொண்டாடுமாறு கடந்த தீபாவளியன்று கேட்டுக்கொண்டார். அப்படி பட்டாசுகளை வெடிக்கும்பொழுது அதனால் ஏற்படும் புகை மாசுவால் சுற்றுப்புற சூழலுக்கு கேடு உண்டாவதாகவும். மேலும், தான் ஒரு ஆஸ்துமா நோயாளி என்றும் பட்டாசு புகை மூலம் மிகவும் கஷ்டப்படுவதாகவும் என்று கூறி இருந்தார்.

இதற்கு அப்பொழுது ஆதரவும் குரல்களும் எதிர்ப்பும் கிளம்பியது. அதைத்தொடர்ந்து ப்ரியங்காவின் திருமணவிழாவில் பல லட்ச ரூபாய் மதிப்பில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனங்கள் அப்பொழுது கிளம்பியது மேலும் வசமாகும் வாங்கிக்கட்டிக் கொண்டார் ப்ரியங்கா.

தற்பொழுது புதிதாக ஒன்றில் நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார். புகைபிடிப்பது ஒரு மோசமான பழக்கம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சில வருடங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். தற்போது தன்னுடைய கணவர் நிக் ஜோனஸ் உடன் அமர்ந்து புகை பிடிப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் பிரியங்காவை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Leave a Comment

OPEN IN APP